ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு ... வந்தது கோடைஉயர்ந்தது வாடகை வந்தது கோடைஉயர்ந்தது வாடகை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
விவசாயிகளுக்கு நெல் கசக்கிறது; பருத்தி இனிக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2014
00:27

நெல், எண்ணெய் வித்துக்கள் போன்ற கரீப் பயிர்களை விட, பருத்தியில் அதிக வருவாய் கிடைப்பதால், அதன் சாகுபடிக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.
சாகுபடி: இதனால், 2014–15ம் பயிர் பருவத்தில் (ஜூலை – ஜூன்), நாட்டின் பருத்தி சாகுபடி பரப்பளவு, 1.38 கோடி ஹெக்டேராக உயரும் என, இந்திய பருத்தி கழகம் மதிப்பீடு செய்துள்ளது.இது, 2013–14ம் பருவத்தில், 1.19 கோடி ஹெக்டராக உள்ளது.வட இந்தியாவில், நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் தற்போது, பருத்தி பயிரிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில், நெல், எண்ணெய் வித்துக்கள் ஆகிய வற்றை பயிரிட்டு வந்த ஏராளமான விவசாயிகள், பருத்தி சாகுபடிக்கு மாறியுள்ளனர்.களை, பூச்சி போன்றவற்றின் தாக்கம் குறைந்த, மேம்பட்ட ரகங்களில் பருத்தி விதைகள் கிடைப்பதால், விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு செலவு கணிசமாக குறைந்துள்ளது.
மேலும், நெல்லை விட, பருத்தி சாகுபடிக்கு, கூலியாட்களின் தேவையும், செலவினமும் குறைவாக உள்ளது.நிலம்பஞ்சாப், அரியானா மாநிலங்களில், ஆழ்துளை கிணற்று நீர் பாசனம் மூலம் நெல் சாகுபடி நடைபெறுவதால், விவசாயிகள் டீசல் செலவை சமாளிக்க வேண்டியுள்ளது.இரண்டு மாதங்களுக்கு மேலாக நெற்பயிரை நீர் சூழ்ந்திருப்பதால், பயிர் நிலத்தின் தன்மையும் மாறுவதாக கூறப்படுகிறது.
அதே சமயம், பருத்தி, நிலத்தின் அடர்த்தியை தளர்த்தி, வேறு பயிர்களின் சாகுபடிக்கும் உதவுகிறது.இது போன்ற காரணங்களால், விவசாயிகள், பருத்தி சாகுபடிக்கு மாறி வருகின்றனர். இது தவிர, பருத்தி விற்பனையிலும், விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.கடந்த ஆண்டு, சிறிய மற்றும் நீண்ட இழை கொண்ட பருத்தி வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை, குவிண்டாலுக்கு முறையே, 3,700 ரூபாய் மற்றும் 4,000 ரூபாய் என்ற அளவில் இருந்தது.
இதை விட அதிக விலைக்கு, அதாவது, ஒரு குவிண்டால், 5,000 ரூபாய்க்கு, விவசாயிகள், பருத்தியை வெளிச் சந்தையில் விற்பனை செய்தனர்.இது குறித்து குஜராத் பருத்தி ஆலைகள் கூட்டமைப்பு தலைவர் திலிப் பாய் படேல் கூறியதாவது:குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும், எண்ணெய் வித்துக்களை பயிரிட்ட விவசாயிகள், பருத்திக்கு மாறி உள்ளனர். இதனால், பருத்தி பயிரிடும் பரப்பளவு, 15 சதவீதம் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மழை: நடப்பாண்டு, வழக்கத்தை விட, மழை பொழிவு, 6 சதவீதம் குறைவாக இருக்கும் என்ற போதிலும், பருத்தி உற்பத்தி பாதிக்கப்படாது. ஓரளவு வறண்ட வானிலை,பருத்தி உற்பத்தியை அதிகரிக்க உதவும். இதன் காரணமாக, பருத்தி உற்பத்தி, 3.85 கோடி பொதிகளில் இருந்து, 4 கோடி பொதிகள் (ஒரு பொதி–170 கிலோ) என்ற அளவிற்கு உயரும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)