பதிவு செய்த நாள்
30 மே2014
00:29
புதுடில்லி ;கோடை வந்தால், சுற்றுலா தலங்களில் உள்ள ஓட்டல்களுக்கு கொண்டாட்டம் தான். தங்கும் அறைகளின் வாடகையை உயர்த்தி விடுவது வழக்கம்.இதன்படி, நடப்பு கோடையிலும், ஓட்டல் அறைகளின் வாடகை, 11 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.முக்கிய சுற்றுலா தலங்களில், 4 – 5 நட்சத்திர ஓட்டல்களின் அறை வாடகை, 5 சதவீதம் உயர்ந்துள்ளது. அதை விட, 2 – 3 நட்சத்திர ஓட்டல்களின் அறை வாடகை அதிகரித்துள்ளது.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள், கோடை விடுமுறையை குதுாகலத்துடன் கொண்டாட, கோவா, ஊட்டி, மைசூர், ஜெய்பூர் ஆகிய நகரங்களையே அதிகம் விரும்புகின்றனர்.இணையதளம் வாயிலாக அலிபாக், தேக்கடி, புதுச்சேரி, ஆலப்புழை ஆகிய சுற்றுலா தலங்களில் உள்ள ஓட்டல் அறைகளை பதிவு செய்வது அதிகரித்துள்ளது என, சுற்றுலா நிறுவனமான மேக்மைடிரிப் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|