பதிவு செய்த நாள்
30 மே2014
01:06
மும்பை,: காளையின் ஆதிக்கத்தில் இருந்த பங்குச் சந்தை, நேற்று, கரடியின் பிடியில் சிக்குண்டது.மே மாதத்திற்கான பங்கு ஒப்பந்த காலம் நிறைவு, பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி அமையாதது போன்றவற்றால், ‘சென்செக்ஸ் மற்றும் ‘நிப்டி தலா, 1.25 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் ஏற்ற, இறக்கமாக இருந்தது. இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில், அதிகரித்து காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.
அதேசமயம், மருந்து துறை நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை காணப்பட்டது.மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 321.94 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 24,234.15 புள்ளிகளில் நிறைவடைந்தது. ‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., பெல், கோல் இந்தியா உள்ளிட்ட, 22 நிறுவனப்பங்குகளின் விலை சரிவடைந்தது.
குறிப்பாக, இன்போசிஸ் நிறுவனப் பங்கின் விலை, 7.81 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதே சமயம், ஆக்சிஸ் பேங்க், ஹிண்டால்கோ, டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட,7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும்,கெயில் நிறுவனப் பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 94 புள்ளிகள் சரிவடைந்து, 7,235.65 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|