பதிவு செய்த நாள்
30 மே2014
14:10
புதுடில்லி:'டீசல் விலை, லிட்டருக்கு, 40 முதல், 50 காசுகள் நாளை உயர்த்தப்படலாம்' என, மத்திய பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் டீசல் விலைக்கும், அதன் சில்லரை விற்பனை விலைக்கும், நிறைய வேறுபாடு இருந்தது.அதனால், இந்த விலை வேறுபாடு சரியாகும் வரை, ஒவ்வொரு மாதமும், குறைவான அளவுக்கு, டீசல் விலையை உயர்த்துவது என, 2013 ஜனவரியில், பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தது. அதன்படி, ஒவ்வொரு மாதமும், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையில், சமீபத்தில், புதிய அரசு பதவியேற்றுள்ளதால், வழக்கம் போல, டீசல் விலை உயர்த்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளித்த, மத்திய பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாதம்தோறும் டீசல் விலை உயர்த்தப்படுவதை, நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. டீசல் விற்பனையால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு சரியாகும் வரை, டீசல் விலை உயர்த்தப்படுவது தொடரும்.
இதுவரை உள்ள நடைமுறைகளின்படி, நாளை டீசல் விலை உயர்த்தப்பட வேண்டும். அனேகமாக, லிட்டருக்கு, 40 முதல், 50 காசுகள் உயர்த்தப்படலாம். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, டீசல் விற்பனையில், லிட்டருக்கு, 4.41 ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன.இவ்வாறு, பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.
லோக்சபா தேர்தல் காரணமாக, கடந்த ஏப்ரலில், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. ஆனால், தேர்தலின் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு, இம்மாதம், 12ம் தேதி முடிவடைந்ததும், லிட்டருக்கு, 1.09 ரூபாய் விலையை உயர்த்தின.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|