தங்கம் விலை ரூ.56 குறைந்ததுதங்கம் விலை ரூ.56 குறைந்தது ... பெண்களை கவர 'மகாராணி கலெக்ஷன்ஸ்' : கோ - ஆப்டெக்ஸ் விரைவில் அறிமுகம் பெண்களை கவர 'மகாராணி கலெக்ஷன்ஸ்' : கோ - ஆப்டெக்ஸ் விரைவில் அறிமுகம் ...
டீசல் விலை லிட்டருக்கு 50 காசு நாளை உயர்கிறது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2014
14:10

புதுடில்லி:'டீசல் விலை, லிட்டருக்கு, 40 முதல், 50 காசுகள் நாளை உயர்த்தப்படலாம்' என, மத்திய பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் டீசல் விலைக்கும், அதன் சில்லரை விற்பனை விலைக்கும், நிறைய வேறுபாடு இருந்தது.அதனால், இந்த விலை வேறுபாடு சரியாகும் வரை, ஒவ்வொரு மாதமும், குறைவான அளவுக்கு, டீசல் விலையை உயர்த்துவது என, 2013 ஜனவரியில், பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தது. அதன்படி, ஒவ்வொரு மாதமும், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையில், சமீபத்தில், புதிய அரசு பதவியேற்றுள்ளதால், வழக்கம் போல, டீசல் விலை உயர்த்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளித்த, மத்திய பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாதம்தோறும் டீசல் விலை உயர்த்தப்படுவதை, நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. டீசல் விற்பனையால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு சரியாகும் வரை, டீசல் விலை உயர்த்தப்படுவது தொடரும்.
இதுவரை உள்ள நடைமுறைகளின்படி, நாளை டீசல் விலை உயர்த்தப்பட வேண்டும். அனேகமாக, லிட்டருக்கு, 40 முதல், 50 காசுகள் உயர்த்தப்படலாம். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, டீசல் விற்பனையில், லிட்டருக்கு, 4.41 ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன.இவ்வாறு, பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.
லோக்சபா தேர்தல் காரணமாக, கடந்த ஏப்ரலில், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. ஆனால், தேர்தலின் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு, இம்மாதம், 12ம் தேதி முடிவடைந்ததும், லிட்டருக்கு, 1.09 ரூபாய் விலையை உயர்த்தின.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)