பதிவு செய்த நாள்
30 மே2014
14:42
புதுடில்லி: மகாத்மா காந்தி படத்துடன், அவரின் பெயருக்குரிய எழுத்துக்கள் இல்லாமல், புதிய, 1,000 ரூபாய் நோட்டுக்களை, ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகிறது. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாத்மா காந்தி படத்துடன் புதிய, 1,000 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இந்த நோட்டுக்களில் ரூபாய் சின்னமும், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்தும், மறுபக்கத்தில், 2014 ஆண்டும் அச்சிடப்பட்டிருக்கும். அதேநேரத்தில், மகாத்மா காந்தி என்ற பெயருக்குரிய எழுத்துக்கள் இருக்காது.தற்போது புழக்கத்தில் உள்ள, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வடிவிலேயே, புதிய ரூபாய் நோட்டுக்களும் இருக்கும். புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டாலும், இதற்கு முன் வெளியிடப்பட்ட, 1,000 ரூபாய் நோட்டுக்களும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்.அத்துடன், புதிதாக, 50 மற்றும், 20 ரூபாய் நோட்டுக்களும் வெளியிடப்பட உள்ளன. 50 ரூபாய் நோட்டுக்களில், நம்பர்களுக்கு முன், ஆர் என்ற எழுத்து இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|