பதிவு செய்த நாள்
30 மே2014
17:07
மும்பை : வாரத்தின் இறுதிநாளில் ஏற்றத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள், இறுதியில் சரிவுடன் முடிந்தன. லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றது, வங்கி, நுகர்வோர் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தது, அடுத்த மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் பணவெளியீட்டு கொள்கை மீதான எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குசந்தைகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 16.81 புள்ளிகள் சரிந்து, 24,217.34-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 5.70 புள்ளிகள் சரிந்து 7,229.95-ஆகவும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் எஸ்.பி.ஐ., ஆக்சிஸ், எச்டிஎப்சி., ஐசிஐசிஐ., மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ்., உள்ளிட்ட 14 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், இந்துஸ்தான், பார்தி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, சன் பார்மா உள்ளிட்ட 16 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|