பதிவு செய்த நாள்
02 ஜூன்2014
00:16
மும்பை:சென்ற நிதியாண்டில், நுண்கடன் நிறுவனங்கள் நிர்வகிக்கும் கடன், 35 சதவீதம் உயர்ந்து, 27,931 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, நுண்கடன் நிறுவனங்கள் கூட்டமைப்பு (எம்.எப்.ஐ.என்.,) தெரிவித்துள்ளது.இக்கூட்டமைப்பில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பிரிவின் கீழ், 46 நுண்கடன் நிறுவனங்கள் உள்ளன.சென்ற நிதியாண்டில், வழங்கப்பட்ட மொத்த கடனில், நடுத்தர நுண் கடன் நிறுவனங்கள் நிர்வகிக்கும் கடன், 57 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.கணக்கீட்டு நிதியாண்டில், சராசரியாக, ஒரு கணக்கின் மூலம், பட்டுவாடா செய்யப்பட்ட கடன் தொகை, 12 சதவீதம் அதிகரித்து, 14,343 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நுண்கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 20 சதவீதம் உயர்ந்து, 2.80 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|