பதிவு செய்த நாள்
02 ஜூன்2014
00:17
மும்பை:சென்ற ஆண்டு டிசம்பரில், இந்திய வங்கிகளில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேற்கொண்ட டிபாசிட், 35.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வங்கிகளில் மேற்கொள்ளும் எப்.சி.என்.ஆர்., டிபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை, கடந்தாண்டு ஆகஸ்ட்டில், ரிசர்வ் வங்கி உயர்த்தியது.
இதன் பயனாக, சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில், வங்கிகளில், எப்.சி.என்.ஆர். டிபாசிட், 3,529 கோடி டாலராக (2.12 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2012ம் ஆண்டின் இதே மாதத்தில், 1,339 கோடி டாலராக (80,340 கோடி ரூபாய்) இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு, சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வசிக்கும், இந்தியர்கள் அதிகளவில் டிபாசிட் மேற்கொண்டுஉள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|