பதிவு செய்த நாள்
02 ஜூன்2014
15:06
சின்னமனூர் : மழையால் மல்லிகைப் பூ விளைச்சல் அதிகரித்து, மார்க்கெட்டிற்கு வரத்தும் அதிகரித்துள்ளதால், விலை மலிந்து, கிலோ ரூ.50 க்கு விற்பனையாகிறது. தேனி மாவட்டத்தில் சீலையம்பட்டி, பல்லவராயன்பட்டி, கோட்டூர், கம்பம், ஆண்டிபட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை அதிகம் சாகுபடியாகிறது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் மட்டும் பனியின் தாக்கத்தால், விளைச்சல் குறையும். அப்போது, விலையும் அதிகமாக இருக்கும். சுபமுகூர்த்தம் காரணமாக, தை, மாசியிலும் விலை அதிகமாகவே இருக்கும். அந்த மாதங்களில் 1 கிலோ ரூ.1500 வரை, விற்பனையானது. ஆண்டுதோறும், வைகாசியில் மல்லிகை விளைச்சல் அதிகம் இருக்கும். இந்நிலையில், கடந்த 2 வாரமாக, பெய்து வரும் மழையால், மார்க்கெட்டிற்கு மல்லிகை வரத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், தற்போது கிலோ ரூ.50 ஆக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|