பதிவு செய்த நாள்
03 ஜூன்2014
00:35
மும்பை: நேற்று, பங்கு வர்த்தகம் மிகுந்த விறுவிறுப்புடன் காணப்பட்டது.அன்னிய நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், குறிப்பாக, வங்கி, எண்ணெய், எரிவாயு மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில், அதிக முதலீடு மேற்கொண்டனர். இதையடுத்து, கடந்த மூன்று வாரங்களில் இல்லாத வகையில், ‘சென்செக்ஸ் மற்றும் ‘நிப்டி’ முறையே, 1.80 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தன.
நடப்பாண்டில் முதன் முறையாக, சென்ற மே மாதத்தில், சீனாவின் தயாரிப்பு துறை உற்பத்தி சூடுபிடித்துள்ளது என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், மருந்து மற்றும் நுகர்பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் முறையே, 0.92 சதவீதம் மற்றும் 0.82 சதவீதம் சரிவை கண்டன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 467.51 புள்ளிகள் அதிகரித்து, 24,684.85 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எல் அண்டு டி, ஆக்சிஸ் பேங்க், கெயில், மாருதி உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், சன்பார்மா, ஐ.டி.சி., விப்ரோ உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 132.55 புள்ளிகள் உயர்ந்து, 7,362.50 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|