பதிவு செய்த நாள்
03 ஜூன்2014
10:00
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. முக்கிய நிறுவன பங்குகளை, முதலீட்டாளர்கள் நேற்று அதிகளவு வாங்கியதால் சென்செக்ஸ் 468 புள்ளிகள் உயர்ந்த நிலையில், இன்று(ஜூன் 3ம் தேதி) ரிசர்வ் வங்கியின் கடன் வெளியீட்டு கொள்கை வெளியாக இருப்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பில் பங்குசந்தைகளில் ஏற்றம் இன்றும் தொடர்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 70.89 புள்ளிகள் உயர்ந்து 24,755.74 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 15.75 புள்ளிகள் உயர்ந்து 7,378.25 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.90 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.03 சதவீதமும் உயர்வுடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|