பதிவு செய்த நாள்
03 ஜூன்2014
16:53
மும்பை : இந்திய பங்குசந்தைகளில் காளையின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று 468 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இன்று(ஜூன் 3ம் தேதி) மேலும் 173 புள்ளிகள் உயர்ந்தது. வங்கி வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாததால் பங்குசந்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டன. குறிப்பாக உலோகம், எண்ணெய், எரிவாயு, வங்கி உள்ளிட்ட பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்கியதால் பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 173.74 புள்ளிகள் உயர்ந்து 24,858.59 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 53.35 புள்ளிகள் உயர்ந்து 7,367.10 புள்ளிகளிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 17 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 13 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகளான எஸ்பிஐ., ஐசிஐசிஐ., ஆக்சிஸ், எச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நல்ல லாபம் பெற்றன. இவைகள் தவிர ஓஎன்ஜிசி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளும் லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|