பதிவு செய்த நாள்
04 ஜூன்2014
03:47
புதுடில்லி: நாட்டின் தொழில் துறை உற்பத்தி, நடப்பு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், 40 சதவீதம் குறையும் என, அசோசெம் மதிப்பீடு செய்துள்ளது.இது குறித்த அறிக்கை விவரம்:வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், சென்ற ஏப்ரல்மே மாதங்களில், 2025 சதவீத மின் வெட்டு இருந்தது. இதனால், தொழில்துறை உற்பத்தி, 30 சதவீதம் குறைந்துள்ளது. இது, ஜூன், ஜூலை மாதங்களில், 40 சதவீதமாக உயரும்.ஆந்திரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், ஒரு நாளைக்கு, 10 –12 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு இருந்தது. இதை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மேற்கண்ட இரு மாநிலங்களில் உள்ள தொழிற்பேட்டைகளில், 45 சதவீதம் உற்பத்தி குறையும். உத்தரபிரதேசத்தில், 11.2 சதவீதமும், ஆந்திராவில், 12.1 சதவீதமும், மின்பற்றாக்குறை நிலவுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், தமிழகம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|