பதிவு செய்த நாள்
04 ஜூன்2014
03:52
மும்பை ;நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று விறுவிறுப்புடன் காணப்பட்டது.ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளின் எஸ்.எல்.ஆர்., விகிதத்தை, 0.50 சதவீதம் குறைத்து, 23லிருந்து 22.50 சதவீதமாக நிர்ணயித்தது. அதேசமயம், ‘ரெப்போ’ (8 சதவீதம்) மற்றும் ரிவர்ஸ் ‘ரெப்போ’ (7 சதவீதம்) வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.எஸ்.எல்.ஆர்., விகித குறைப்பால், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால், ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ 0.70 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டன.
இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. அதேசமயம், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கத்துடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.அதேசமயம், நுகர்பொருட்கள், வங்கி, மருந்து, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 173.74 புள்ளிகள் அதிகரித்து, 24,858.59 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா ஸ்டீல், கோல் இந்தியா உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாக்டர் ரெட்டீஸ், கெயில் உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 53.35 புள்ளிகள் உயர்ந்து, 7,415.85 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|