பதிவு செய்த நாள்
04 ஜூன்2014
17:38
மும்பை : லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய பங்குவர்த்தகம் சரிவில் முடிந்தன. வாரத்தின் மூன்றாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. ஆனால் உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கம், லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை சரிந்தது போன்ற காரணங்களால் சற்றுநேரத்திலேயே இந்திய பங்குசந்தைகள் சரிந்து, இறுதியில் சரிவிலேயே முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 52.76 புள்ளிகள் சரிந்து 24,773.93-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 13.60 புள்ளிகள் சரிந்து 7,402.25-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி., டிசிஎஸ்., பார்தி ஏர்டெல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எச்டிஎப்சி., உள்ளிட்ட 15 நிறுவன பங்குகள் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக தகவல்தொழில்நுட்ப பங்குகள் 1.27 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் 1.26 சதவீதமும், எப்எம்சிஜி., பங்குகள் 0.23 சதவீதமும் சரிவை சந்தித்தன. அதேசமயம் உலோக நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|