வேளாண் துறைக்கு தனி ‘டிவி : நிதி அமைச்சரிடம் கோரிக்கைவேளாண் துறைக்கு தனி ‘டிவி : நிதி அமைச்சரிடம் கோரிக்கை ... மருந்து, இதய வால்வு கருவிகளுக்குசுலப  தவணையில் கடன் வசதி மருந்து, இதய வால்வு கருவிகளுக்குசுலப தவணையில் கடன் வசதி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்டுக்கடன் வழங்குவதில் வங்கிகள் மும்முரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2014
23:53

மும்பை :வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குவதில், மும்முரம் காட்டி வருகின்றன.கடந்த ஏப்ரலில், இப்பிரிவில் வழங்கப்பட்ட கடன், 17.1 சதவீதம் என்ற அளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டு, 5,45,100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், வங்கிகள், நிறுவனங்களுக்கு வழங்கிய கடன், 12.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு, 25,14,000 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்தாண்டின் இதே மாதத்தில், இப்பிரிவில் வழங்கப்பட்ட கடன், 22,39,000 கோடி ரூபாய் (15.6 சதவீதம் வளர்ச்சி) என்ற அளவில் இருந்தது.இதில், பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன், 11.7 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து, 20,31,900 கோடி ரூபாயாக உள்ளது. கடந்தாண்டின் இதே மாதத்தில், இப்பிரிவின் கடன் வளர்ச்சி, 15.7 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. வங்கிகள், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு வழங்கிய கடன், 23 சதவீதத்திலிருந்து, 21.2 சதவீதமாக குறைந்து, 3,56,800 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
மேற்கண்டவை தவிர, வங்கிகள் வழங்கிய சில்லரை கடனும், 15.6 சதவீதத்திலிருந்து, 14.5 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.அதேசமயம், கடந்த ஏப்ரலில், வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், 14.2 சதவீதம் அதிகரித்து, 56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.மேலும், சேவை துறைக்கு வழங்கிய கடன், 11,40,400 கோடியிலிருந்து, 13,34,800 கோடியாகவும், தனிநபர் கடன், 9.08 லட்சத்திலிருந்து, 10.39 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.இது தவிர, வங்கிகள், முன்னுரிமை துறைக்கு வழங்கிய கடன், 18,61,100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)