வேளாண் துறைக்கு தனி ‘டிவி : நிதி அமைச்சரிடம் கோரிக்கைவேளாண் துறைக்கு தனி ‘டிவி : நிதி அமைச்சரிடம் கோரிக்கை ... ரொக்கம்சாரா பரிவர்த்தனை இந்தியாவிற்கு 13வது இடம் ரொக்கம்சாரா பரிவர்த்தனை இந்தியாவிற்கு 13வது இடம் ...
மருந்து, இதய வால்வு கருவிகளுக்குசுலப தவணையில் கடன் வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2014
00:00

வீடு, வாகனம், கல்வி, நுகர்வோர் சாதனங்களுக்கான கடன் பிரிவில், அடுத்து மருந்துகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் வால்வு உள்ளிட்ட உள்ளுருப்பு கருவிகளும் இடம் பெற்றுள்ளன.மருந்து நிறுவனங்கள், நிதி நிறுவனங்களுடன் இணைந்து இவ்வகை கடன் வசதியை வழங்குகின்றன.
வட்டி கிடையாதுஅமெரிக்காவின் மெர்க் அண்டு கோ நிறுவனம், 'ஹெபாடிட்டிஸ்–சி' நோய்க்கான 'இன்டர்பெரான்' என்ற மருந்தை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், பஞ்சாபில், சோதனை அடிப்படையில்,'சாம்பவ்' என்ற திட்டத்தின் கீழ், நோயாளிகளுக்கு கூடுதல் கட்டண மின்றி மருந்துகளை வழங்கி வருகிறது. இக்கடன் வசதிக்காக,ஒரு நிதிநிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது.மெட்ரானிக் என்ற நிறுவனம், நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர், கத்தோடு ரே டியூப், இதய வால்வுகள் உள்ளிட்ட கருவிகளுக்கான தொகையை, கடனாக வழங்குகிறது. இதற்காக, மைத்ரிகா பவுண்டேஷன் என்ற அமைப்புடன் இந்நிறுவனம் இணைந்து செயல்படுகிறது.
"மருத்துவ கருவிகளுக்கான தொகையில், 85 சதவீதத்தை, வட்டியில்லாத கடனாக பெற்று, மாத தவணையில் திரும்ப செலுத்தலாம்" என, மெட்ரானிக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.தவணையை, ஆறு மாதங்கள் முதல், ஐந்து ஆண்டுகள் வரை செலுத்தலாம் என, அவர் மேலும் கூறினார்.செலவு
நோயாளிகள், மருத்துவ காப்பீட்டு தொகைக்கு மேற்பட்ட செலவை, தாங்களே ஏற்க வேண்டிய சூழல் உள்ளது. அத்தகையோருக்கு, சுலப கடன் வசதி உதவும்.சென்ற 2013–14ம் நிதியாண்டில், ஆரோக்கிய பராமரிப்பிற்கு செலவிடப்பட்டதில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு, 7.2 சதவீதமாக உள்ளது.மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கான செலவினம் (திரும்ப பெறப்பட்டவை), 25.8 சதவீதமாக உள்ளது.எஞ்சிய, 67 சதவீத செலவை, நோயாளிகள் சுமக்க நேரிட்டுள்ளது என, பி.டபிள்யூ.சி., நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)