பதிவு செய்த நாள்
06 ஜூன்2014
16:08
மும்பை : வாரத்தின் கடைசி நாளில் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்துடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் 200 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தமான சென்செக்ஸ், தொடர்ந்து அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும், முக்கிய நிறுவன பங்குகளின் விலை ஏற்றத்தாலும் உச்சம் பெற்றன. இதனால் இன்றைய நாள் முழுக்க பங்குவர்த்தகம் அதிக ஏற்றத்துடனேயே காணப்பட்டன. இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 376.95 புள்ளிகள் உயர்ந்து 25,396.46-புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 109.30 புள்ளிகள் உயர்ந்து 7,583.40 புள்ளிகளிலும் முடிந்தன.
குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் ஓஎன்ஜிசி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை அதிக லாபம் பெற்றன. இவை தவிர்த்து எச்டிஎப்சி., ஹீரோ மோட்டோ கார்ப், ஐசிஐசிஐ., எச்டிஎப்சி., எஸ்பிஐ., உள்ளிட்ட நிறுவன பங்குகளும் லாபம் பெற்றன. மொத்தத்தில் இன்றைய வர்த்தகத்தில் 2132 நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், 931 நிறுவன பங்குகள் சரிந்தும், 82 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|