தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்வுதங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்வு ... இயற்கை எரிவாயு விலை உயர்வு ஜூலை 1ல் அமலாக வாய்ப்பு இயற்கை எரிவாயு விலை உயர்வு ஜூலை 1ல் அமலாக வாய்ப்பு ...
புதிய எல்லைகளை எட்டும் பங்கு வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2014
00:00

மும்பை :சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, பங்கு வியாபாரம் மிகவும் சூடுபிடித்து காணப்பட்டது.மோடி அரசு, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை துரித கதியில் செயல்படுத்தும் என்ற நிலைப்பாட்டால், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர். மேலும், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடும் சிறப்பான அளவில் இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு, வங்கி, மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலோக துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 376.95 புள்ளிகள் அதிகரித்து, 25,396.46 புள்ளிகளில் நிலைபெற்றது. இது புதிய சாதனை அளவாகும்.கடந்த மே 16, பார்லி., தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, வர்த்தகத்தின் இடையே, ‘சென்செக்ஸ்’ மற்றும் நிப்டி முறையே, 25,375 புள்ளிகள் மற்றும் 7,563 புள்ளிகளை தாண்டியதே சாதனையாக கருதப்பட்டது.
‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., கெயில் உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், சேசா ஸ்டெர்லைட், இன்போசிஸ் உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 109.30 புள்ளிகள் உயர்ந்து, 7,583.40 புள்ளிகளில் நிலைகொண்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)