பதிவு செய்த நாள்
07 ஜூன்2014
00:00
மும்பை :சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, பங்கு வியாபாரம் மிகவும் சூடுபிடித்து காணப்பட்டது.மோடி அரசு, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை துரித கதியில் செயல்படுத்தும் என்ற நிலைப்பாட்டால், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர். மேலும், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடும் சிறப்பான அளவில் இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு, வங்கி, மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலோக துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 376.95 புள்ளிகள் அதிகரித்து, 25,396.46 புள்ளிகளில் நிலைபெற்றது. இது புதிய சாதனை அளவாகும்.கடந்த மே 16, பார்லி., தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, வர்த்தகத்தின் இடையே, ‘சென்செக்ஸ்’ மற்றும் நிப்டி முறையே, 25,375 புள்ளிகள் மற்றும் 7,563 புள்ளிகளை தாண்டியதே சாதனையாக கருதப்பட்டது.
‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., கெயில் உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், சேசா ஸ்டெர்லைட், இன்போசிஸ் உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 109.30 புள்ளிகள் உயர்ந்து, 7,583.40 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|