பதிவு செய்த நாள்
07 ஜூன்2014
00:03
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கான புதிய விலை குறித்து, மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதையடுத்து, ஜூலை 1ம் தேதி முதல், புதிய விலை அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு முன்னாள் தலைவர், ரங்கராஜன் தலைமையிலான குழு, முந்தைய மத்திய அரசுக்கு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என, பரிந்துரைத்திருந்தது.இதன்படி, சென்ற ஏப்ரல் முதல், 1 மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் எரிவாயுவின் விலை, 4.2 டாலரில் இருந்து, 8.4 டாலராக, உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பார்லிமென்ட் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, இந்த விலை உயர்வு, ஜூலை 1ம் தேதி அமலுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, மத்தியில் புதிய அரசு அமைந்துள்ளதால், இயற்கை எரிவாயு விலை உயர்வை அப்படியே அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து, பிரதமர் மோடி முடிவு எடுப்பார். மறுபரிசீலனை அவசியம் என, பிரதமர் கருதினால், இவ்விவகாரம், அமைச்சரவை குழுவின் முடிவிற்கு விடப்பட்டு, அதன்பின், புதிய விலை அறிவிக்கப்படும் என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பார்லிமென்ட் தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., ஆட்சி அமைந்தால், இயற்கை எரிவாயு விலை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என, மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|