பதிவு செய்த நாள்
09 ஜூன்2014
01:10
மத்திய, மாநில முகமை அமைப்புகளின் கோதுமை கொள்முதல், நடப்பு, 2014 – 15ம் சந்தை பருவத்தில் (மார்ச் – ஜூன்), தற்போதைய நிலவரப்படி, நிர்ணயித்த இலக்கை (3.10 கோடி டன்) விட, 34 லட்சம் டன் குறைந்து, 2.76 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. எனினும், இது, சென்ற பருவத்தின் கொள்முதலை ( 2.53 கோடி டன்) விட, அதிகம். மத்திய, மாநில முகமை அமைப்புகள், முக்கிய மாநிலங்களில் இருந்து, கோதுமை முழுவதையும் கொள்முதல் செய்து விட்டன.
இம்மாத இறுதிக்குள், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் எஞ்சிய கொள்முதல் பணிகளும் முடிவடைந்து விடும்.சென்ற ஏப்ரலில், முகமை அமைப்புகளிடம், 1.70 கோடி டன் கோதுமை கையிருப்பில் இருந்தது. இதில், தற்போது கொள்முதல் செய்யப்பட்ட தையும் கணக்கிட்டால், 4.46 கோடி டன் கோதுமை இருப்பு உள்ளது. இதில், பொது வினியோக திட்டத்திற்கு, 3 கோடி டன் வினியோகம் செய்யப்படும் பட்சத்தில், வரும், 2015ம் ஆண்டு ஏப்ரலில், அரசு முகமை அமைப்புகளிடம், 1.46 கோடி டன் கோதுமை கையிருப்பு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது, நிர்ணயிக்கப்பட்ட உபரி அளவான, 70 லட்சம் டன்னை விட, அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|