பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து ரூ.10 லட்சம் கோடியை தாண்டியதுபரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது ... தோட்ட பயிர்கள் உற்பத்தியில் சாதனை: காய்கறி, பழங்கள் விலை கட்டுக்குள் இருக்கும் தோட்ட பயிர்கள் உற்பத்தியில் சாதனை: காய்கறி, பழங்கள் விலை கட்டுக்குள் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
காப்பீட்டில் 26 சதவீத நேரடி முதலீடுஎன்.ஆர்.ஐ.,க்கு ரிசர்வ் வங்கி அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2014
01:15

புதுடில்லி:காப்பீட்டு துறையில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,) உள்ளிட்ட அன்னிய முதலீட்டாளர்கள், அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, நேரடியாக முதலீடு செய்ய, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதற்கு முன், காப்பீட்டு நிறுவனங்களில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு மட்டுமே இத்தகைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.தற்போது, காப்பீட்டு துறையில் தரகு சேவை நிறுவனங்கள், மூன்றாம் நபர் நிர்வாகங்கள், சர்வேயர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், நேரடியாக 26 சதவீத அன்னிய முதலீடுகள் மேற்கொள்ள முடியும்.அன்னிய நிதி நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர் ஆகியோர், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, மேற்கண்ட காப்பீட்டு துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.
அதே சமயம், அது, ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில், 26 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.எனினும், காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்திடம் (இரிடா), முதலீடு தொடர்பான தகவல்களை அளித்து, உரிய உரிமம் பெறுவோர் மட்டுமே காப்பீட்டு துறையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவர் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளது.இதன் மூலம், காப்பீட்டு துறையில், அன்னிய முதலீடுகளில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்பட்டு, அன்னியச் செலாவணி வரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)