தங்கம் விலை ரூ.24 குறைந்ததுதங்கம் விலை ரூ.24 குறைந்தது ... இயற்கை ரப்பர் விலை வீழ்ச்சி: இறக்குமதிக்கு தடை விதிக்க கோரிக்கை இயற்கை ரப்பர் விலை வீழ்ச்சி: இறக்குமதிக்கு தடை விதிக்க கோரிக்கை ...
பொருளாதார உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த மோடி அரசு முன்னுரிமை - பிரணாப் உரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2014
12:58

புதுடில்லி : பொருளாதாரத்தை உயர்த்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் மோடியின் புதிய அரசு அதிக முன்னுரிமை கொடுத்திருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். அவருடன் சேர்ந்து அமைச்சர்கள், புதிய எம்.பி.க்களும் பதவியேற்றுள்ளனர். புதிய அரசு ஆட்சி அமைத்த பின்னர், பார்லியின் இரு அவைகளின் கூட்டுகூட்டம் இன்று நடந்தது. முதலாவதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மோடி அரசு செய்ய இருக்கும் திட்டங்களை உரையாக நிகழ்த்தினார்.
இதில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவற்காக மோடி அரசு செய்ய இருக்கும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கூறிய முக்கிய அம்சங்கள்...
* வறுமை ஒழிப்பு, பொருளாதார உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை.
* பாரம்பரியம், திறமை, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம்(டிரடிசன், டேலன்ட், டூரிசம், டிரேடு மற்றும் டெக்னாலஜி) போன்ற 5டி துறைகளுக்கு முன்னுரிமை.
* விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பில் அதிக முதலீடு.
* சிறிய அரசு, சிறந்த நிர்வாகம்.
* அனைத்து மாநிலங்களிலும் ஐஐடி மற்றும் ஐஐஎம்.
* கிழக்கு மாநிலங்களை மேம்படுத்த நடவடிக்கை
* மின்சாரம் மற்றும் எரிசக்தியை மேம்படுத்த நடவடிக்கை
* அதிவிரைவு ரயில் மற்றும் ரயில்வே துறையை மேம்படுத்துதல்.
* சிறிய நகரங்களை இணைக்க குறைந்த கட்டணத்தில் விமான சேவை மற்றும் சிறிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை.
* மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர நடவடிக்கை.
* தேசிய சோலார் மின்உற்பத்தி திட்டத்தை விரிவாக்க நடவடிக்கை.
* வேலைவாய்ப்பை உருவாக்க துரித நடவடிக்கை.
* அந்நிய முதலீட்டை அதிகரித்து வேலை வாய்பை உருவாக்க நடவடிக்கை.
* உலகதரத்தில் பிரத்யேக சரக்கு முனையங்கள் மற்றும் தொழில்துறை முனையங்கள் அமைக்க முதலீடு.
* கள்ள சந்தையை ஒழிக்க நடவடிக்கை.
* பாதுகாப்பு துறையில் தனியார் முதலீடு.
* அதிவிரைவு ரயிலுக்கான வைர நாற்கரத்திட்டம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)