பொருளாதார உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த மோடி அரசு முன்னுரிமை - பிரணாப் உரை!பொருளாதார உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த மோடி அரசு முன்னுரிமை - ... ... இயற்கை ரப்பர் விலை வீழ்ச்சி: இறக்குமதிக்கு தடை விதிக்க கோரிக்கை இயற்கை ரப்பர் விலை வீழ்ச்சி: இறக்குமதிக்கு தடை விதிக்க கோரிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மோடி அரசின் பொருளாதார திட்டங்கள் - சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2014
17:01

மும்பை : சென்செக்ஸ் 25,500 புள்ளிகளையும், நிப்டி 7,600 புள்ளிகளையும் தாண்டி வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் புதிய‌ உச்சத்தை தொட்டு சாதனை படைத்தன. மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பங்குசந்தைகளில் அதிரடி தொடர்ந்து வந்த நிலையில், மோடி அரசு செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் குறித்து, பார்லியின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அதில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க மோடி அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதன்விளைவாக துவக்கத்திலேயே ஏற்றம் பெற்ற இந்திய பங்குசந்தைகள் நாள் முழுக்க ஏற்றத்திலேயே முடிந்தன. அதில் நிப்டி 7600 புள்ளிகளை தொட்டு புதிய ‌சாதனை படைத்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 183.75 புள்ளிகள் உயர்ந்து 25,580.21-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 71.20 புள்ளிகள் உயர்ந்து 7,654.60-ஆகவும் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை வர்த்தகமாகின. 3,167 பங்குகளில் 2300 பங்குகள் உயர்ந்து இருந்தன. அதிலும் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, எல்அண்ட்டி., போன்ற பங்குகள் அதிக லாபம் பெற்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)