பதிவு செய்த நாள்
10 ஜூன்2014
00:18
புதுடில்லி :எரிபொருள் செலவை குறைக்கும் நோக்கில், சென்னையில் இருந்து குஜராத்திற்கு, கடல் வழியாக வாகனங்களை கொண்டு செல்லும் திட்டம் குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.எரிபொருள்சென்னையில் இருந்து குஜராத்திற்கு, கடல் வழியாகவும், அங்கிருந்து, டில்லிக்கு, சாலை வழியாகவும், வாகனங்களை கொண்டு செல்வதன் மூலம், குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் செலவு குறையும் என, கருதப்படுகிறது.
இதையடுத்து, இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து, விரிவான அறிக்கை தயாரிக்குமாறு, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தை, அத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கேட்டுக் கொண்டு உள்ளார்.சாலை வழியே வாகனங்களை கொண்டு செல்வதற்கு, 1 கி.மீ.,க்கு 1.50 ரூபாய் செலவாகிறது. கடல் மார்க்கமாக கொண்டு செல்வதற்கான செலவு, வெறும் 55 பைசா என்ற அளவில் உள்ளது.எனவே தான், அதிக அளவில் வாகன தொழிற்சாலைகளை கொண்டுள்ள சென்னையில் இருந்து, கடல் மார்க்கமாக, குஜராத்திற்கு வாகனங்களை கொண்டு செல்வது லாபகரமானதாக இருக்கும் என, கருதப்படுகிறது.
அது போன்று, மாருதி சுசூகி போன்ற நிறுவனங்கள், குர்கானில் இருந்து, குஜராத்திற்கு, சாலை வழியாகவும், அங்கிருந்து கப்பல் மூலம் சென்னைக்கும் வாகனங்களை அனுப்பலாம்.சென்னை, எண்ணுார் துறைமுகம், சென்ற டிசம்பர் இறுதி நிலவரப்படி, 4.49 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து உள்ளது.பரிசீலனைநாட்டில் உள்ள இதர துறைமுகங்களுக்கு இடையிலும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மேற்கொள்வது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|