இயற்கை ரப்பர் விலை வீழ்ச்சி: இறக்குமதிக்கு தடை விதிக்க கோரிக்கைஇயற்கை ரப்பர் விலை வீழ்ச்சி: இறக்குமதிக்கு தடை விதிக்க கோரிக்கை ... புண்ணாக்கு ஏற்றுமதியில் தொய்வு புண்ணாக்கு ஏற்றுமதியில் தொய்வு ...
சென்னை – குஜராத் இடையே கப்பலில் வாகனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2014
00:18

புதுடில்லி :எரிபொருள் செலவை குறைக்கும் நோக்கில், சென்னையில் இருந்து குஜராத்திற்கு, கடல் வழியாக வாகனங்களை கொண்டு செல்லும் திட்டம் குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.எரிபொருள்சென்னையில் இருந்து குஜராத்திற்கு, கடல் வழியாகவும், அங்கிருந்து, டில்லிக்கு, சாலை வழியாகவும், வாகனங்களை கொண்டு செல்வதன் மூலம், குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் செலவு குறையும் என, கருதப்படுகிறது.
இதையடுத்து, இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து, விரிவான அறிக்கை தயாரிக்குமாறு, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தை, அத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கேட்டுக் கொண்டு உள்ளார்.சாலை வழியே வாகனங்களை கொண்டு செல்வதற்கு, 1 கி.மீ.,க்கு 1.50 ரூபாய் செலவாகிறது. கடல் மார்க்கமாக கொண்டு செல்வதற்கான செலவு, வெறும் 55 பைசா என்ற அளவில் உள்ளது.எனவே தான், அதிக அளவில் வாகன தொழிற்சாலைகளை கொண்டுள்ள சென்னையில் இருந்து, கடல் மார்க்கமாக, குஜராத்திற்கு வாகனங்களை கொண்டு செல்வது லாபகரமானதாக இருக்கும் என, கருதப்படுகிறது.
அது போன்று, மாருதி சுசூகி போன்ற நிறுவனங்கள், குர்கானில் இருந்து, குஜராத்திற்கு, சாலை வழியாகவும், அங்கிருந்து கப்பல் மூலம் சென்னைக்கும் வாகனங்களை அனுப்பலாம்.சென்னை, எண்ணுார் துறைமுகம், சென்ற டிசம்பர் இறுதி நிலவரப்படி, 4.49 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து உள்ளது.பரிசீலனைநாட்டில் உள்ள இதர துறைமுகங்களுக்கு இடையிலும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மேற்கொள்வது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)