பதிவு செய்த நாள்
11 ஜூன்2014
17:03
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சிறு ஏற்றத்துடன் பங்குசந்தைகள் துவங்கின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்தது, உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்ற - இறக்கம் மற்றும் மே மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்தது போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 109.80 புள்ளிகள் சரிந்து 25,473.89-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 29.55 புள்ளிகள் சரிந்து 7,626.85-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி., என்டிபிசி., மாருதி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எல்அண்ட்டி., ஐடிசி., ஸ்டெர்லைட், கோல் இந்தியா உள்ளிட்ட 17 நிறுவன பங்குகள் விலை சரிவில் முடிந்தன. மற்ற 13 நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|