பதிவு செய்த நாள்
12 ஜூன்2014
00:33
புதுடில்லி ;நாட்டின் ஏற்றுமதி, சென்ற மே மாதத்தில், 12.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.68 லட்சம் கோடி ரூபாயாக (2,800 கோடி டாலர்) அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆறு மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
வீழ்ச்சி: சென்ற ஆண்டு மே மாதத்தில், ஏற்றுமதி, 1.49 லட்சம் கோடி ரூபாயாக (2,490 கோடி டாலர்) இருந்தது.கணக்கீட்டு மாதத்தில், இறக்குமதி, 11.4 சதவீதம் குறைந்து, 2.35 லட்சம் கோடி ரூபாயாக (3,923 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்துள்ள நிலையிலும், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில், சென்ற மே மாதம், 1,123 கோடி டாலராக அதிகரித்து உள்ளது.இது, ஏப்ரலில், 1,009 கோடி டாலராக இருந்தது.சென்ற மே மாதத்தில், தங்கம் இறக்குமதி, 72 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 219 கோடி டாலராக (13,140 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.
பெட்ரோலிய பொருட்கள்: இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 770 கோடி டாலராக (46,200 கோடி ரூபாய்) மிகவும் அதிகரித்து காணப்பட்டது.மதிப்பீட்டு மாதத்தில், பொறியியல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி விறுவிறுப்படைந்துள்ளது.
நடப்பு 2014–15ம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்.,–மே), ஏற்றுமதி, 8.87 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,363 கோடி டாலராக (3.22 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 13.16 சதவீதம் குறைந்து, 7,495 கோடி டாலராக (4.50 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தகதுறைசெயலர் ராஜீவ் கெர் கூறியதாவது:இலக்குமுதன் முறையாக, கடந்த ஆறு மாதத்தில், ஏற்றுமதி, இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு ரூபாய் மதிப்பு உயர்வு காரணமல்ல.இந்த வளர்ச்சி தொடரும் பட்சத்தில், சர்வதேச அளவில், இந்திய பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது எனலாம்.நடப்பு நிதியாண்டில், நாள் ஒன்றுக்கு, 100 கோடி டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|