பதிவு செய்த நாள்
12 ஜூன்2014
00:35
புதுடில்லி: தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என, மத்திய வர்த்தக துறை செயலர் ராஜீவ் கெர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
தங்கம் இறக்குமதி குறித்த மறுபரிசீலனை அவசியம் என, மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. குறிப்பாக, தங்கத்திற்கான சுங்க வரி மற்றும் இறக்குமதி நடைமுறைகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும். இதுகுறித்து, நிதியமைச்சகத்திற்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த நோக்கம் எட்டப்பட்டுள்ளதாக கருதினால், வரும் மாதங்களில், முழுமையாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட அளவிலாவது, தங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, இறக்குமதியாகும் தங்கத்தில், 20 சதவீதம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நடைமுறை தளர்த்தப்பட வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு, தாராளமாக தங்கம் கிடைக்க வழி செய்ய வேண்டும். எத்தகைய தீர்வு தேவையோ,அது மத்திய பட்ஜெட்டில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|