பதிவு செய்த நாள்
12 ஜூன்2014
00:40
புதுடில்லி: மத்திய அரசு, அதன் தொகுப்பில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்வதை நிறுத்தலாமா என, யோசித்து வருகிறது.
வெளிச்சந்தை:உள்நாட்டில், பருவமழை, வழக்கத்தை விட குறையும் என்ற மதிப்பீடு காரணமாக, கோதுமைக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கோதுமை விலையும் கடுமையாக சரிவடைந்துள்ளது. அதனால், கையிருப்பில் உள்ள கோதுமையை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் அதன் ஏற்றுமதியை நிறுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதே சமயம், வெளிச் சந்தையில், தனியாரின் கோதுமை ஏற்றுமதியில் மத்திய அரசு தலையிடாது என, உணவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிடங்கு பற்றாக்குறை யால், இந்திய உணவு கழகத்திலிருந்து, நடப்பு ஜூன் மாதத்திற்குள், 20 லட்சம் டன் கோதுமையை, ஏற்றுமதி செய்ய, முந்தைய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதுவரை, 15 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதியாகியுள்ளது. இன்னும் 5 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய வேண்டிஉள்ளது.
அமெரிக்கா:இந்நிலையில், சர்வதேச அளவில், கோதுமை விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் ஒரு டன் கோதுமைக்கான சராசரி ஏற்றுமதி விலை, 260 டாலராக உள்ளது. இதை விட, அமெரிக்காவின் கோதுமை விலை ( 250 டாலர்) குறைவாக உள்ளது.இதன் காரணமாக, எஞ்சிய கோதுமையின் ஏற்றுமதிக்கு, புதிதாக ஒப்பந்தப் புள்ளி வெளியிட வில்லை. வறட்சியை சமாளிக்கும் வகையில், கோதுமை ஏற்றுமதியை நிறுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக, அந்த அதிகாரி மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|