கச்சா எண்ணெய் உற்பத்திஉயராது : ‘ஒபெக்’ அறிவிப்புகச்சா எண்ணெய் உற்பத்திஉயராது : ‘ஒபெக்’ அறிவிப்பு ... தொலைத்தொடர்பு வருவாய்3 நிறுவனங்கள் ஏகபோகம் தொலைத்தொடர்பு வருவாய்3 நிறுவனங்கள் ஏகபோகம் ...
கோதுமை ஏற்றுமதியை நிறுத்த திட்டம் : தனியாருக்கு தடை இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2014
00:40

புதுடில்லி: மத்திய அரசு, அதன் தொகுப்பில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்வதை நிறுத்தலாமா என, யோசித்து வருகிறது.
வெளிச்சந்தை:உள்நாட்டில், பருவமழை, வழக்கத்தை விட குறையும் என்ற மதிப்பீடு காரணமாக, கோதுமைக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கோதுமை விலையும் கடுமையாக சரிவடைந்துள்ளது. அதனால், கையிருப்பில் உள்ள கோதுமையை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் அதன் ஏற்றுமதியை நிறுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதே சமயம், வெளிச் சந்தையில், தனியாரின் கோதுமை ஏற்றுமதியில் மத்திய அரசு தலையிடாது என, உணவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிடங்கு பற்றாக்குறை யால், இந்திய உணவு கழகத்திலிருந்து, நடப்பு ஜூன் மாதத்திற்குள், 20 லட்சம் டன் கோதுமையை, ஏற்றுமதி செய்ய, முந்தைய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதுவரை, 15 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதியாகியுள்ளது. இன்னும் 5 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய வேண்டிஉள்ளது.
அமெரிக்கா:இந்நிலையில், சர்வதேச அளவில், கோதுமை விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் ஒரு டன் கோதுமைக்கான சராசரி ஏற்றுமதி விலை, 260 டாலராக உள்ளது. இதை விட, அமெரிக்காவின் கோதுமை விலை ( 250 டாலர்) குறைவாக உள்ளது.இதன் காரணமாக, எஞ்சிய கோதுமையின் ஏற்றுமதிக்கு, புதிதாக ஒப்பந்தப் புள்ளி வெளியிட வில்லை. வறட்சியை சமாளிக்கும் வகையில், கோதுமை ஏற்றுமதியை நிறுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக, அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)