பதிவு செய்த நாள்
12 ஜூன்2014
00:48
மும்பை: மும்பை பங்குச் சந்தையில், காலையில் வர்த்தகம் துவங்கியதும், ஒரு கட்டத்தில், ‘சென்செக்ஸ் 25,735.87 புள்ளிகளை எட்டி, புதிய உச்சத்தைதொட்டிருந்தது. இந்நிலையில், சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் நடப்பாண்டில் பருவமழை சராசரிக்கும் குறைவாக இருக்கும் என்ற, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு ஆகியவை, பங்கு வர்த்தகத்தை பாதித்தன.
உக்ரைன் நெருக்கடி, அமெரிக்காவில் நிலவும் கடுமையான குளிர், நடுத்தர வருவாய் நாடுகளில்ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்கள் போன்றவற்றால், நடப்பாண்டில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறையும் என, உலக வங்கி தெரிவித்துஉள்ளது.இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கம் கண்டது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 109.80 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு, 25,473.89 புள்ளிகளில் நிலைகொண்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 29.55 புள்ளிகள் சரிவடைந்து, 7,626.85 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|