பதிவு செய்த நாள்
12 ஜூன்2014
17:15
மும்பை : பங்குசந்தைகள் நேற்று சரிவை சந்தித்த நிலையில் இன்று(ஜூன் 12ம் தேதி) ஏற்றம் கண்டன. தொழில்துறை உற்பத்தி மற்றும் சில்லரை வர்த்தக பணவீக்கம் மீதான எதிர்பார்ப்பாலும், எச்டிஎப்சி., டிசிஎஸ்., சன்பார்மா உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் விலை ஏற்றம் கண்டு லாபம் பெற்றதாலும் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 102.32 புள்ளிகள் உயர்ந்து 25,576.21 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 23.05 புள்ளிகள் உயர்ந்து 7,649.90 புள்ளிகளிலும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் எச்டிஎப்சி., டிசிஎஸ்., சன்பார்மா உள்ளிட்ட 20 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், ஆக்சிஸ், பெல், கோல் இந்தியா, ஐசிஐசிஐ., உள்ளிட்ட 9 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், டாடா பவர் பங்குகள் விலை மாற்றமின்றியும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|