பதிவு செய்த நாள்
13 ஜூன்2014
01:20
மும்பை:புதனன்று, சரிவை சந்தித்த பங்குச் சந்தை, நேற்று மீண்டும் எழுச்சி கண்டது.
பங்கு வர்த்தகத்திற்கு பின் வெளியாகும் சில்லரை பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள், சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், பல்வேறு துறை சார்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு அதிகரித்தது.
குறிப்பாக, வீட்டு வசதி துறையை சேர்ந்த எச்.டீ.எப்.சி நிறுவனம் மற்றும் எச்.டீ.எப்.சி., வங்கி ஆகியவற்றின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.இவ்விரு பங்குகளும், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ யின் மொத்த புள்ளிகள் உயர்வில், கிட்டத்தட்ட 78 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தன. இன்போசிஸ் தலைமையில் மாற்றம் என்ற செய்தியால், அந்நிறுவனப் பங்கின் விலையில், அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.
எனினும், வர்த்தகத்தின் இறுதியில், பங்கின் விலை, 0.38 சதவீத சரிவைக் கண்டது.பங்கு வர்த்தகத்தின் இறுதியில், ‘சென்செக்ஸ்’ 102.32 புள்ளிகள் உயர்ந்து, 25,576.21 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிப்டி’ 23.05 புள்ளிகள் அதிகரித்து, 7,649.90 புள்ளிகளில் நிலை கொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|