தங்கம் விலை சிறிது குறைந்ததுதங்கம் விலை சிறிது குறைந்தது ... வியட்னாம் மிளகில்  கொள்ளை லாபம் வியட்னாம் மிளகில் கொள்ளை லாபம் ...
சர்க்­கரை ஏற்­று­மதி மானியம் உயர்வு:டன்­னுக்கு ரூ.3,300 ஆக நிர்­ணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2014
01:22

மும்பை:சர்க்­கரை ஏற்­று­ம­திக்­கான மானி­யத்தை, மீண்டும் டன்­னுக்கு, 3,300 ரூபா­யாக மத்­திய அரசு நிர்­ணயம் செய்­துள்­ளது.
கரும்பு விவ­சா­யி­களின் நலனை கருத்தில் கொண்டு, சர்க்­கரை விலை மேலும் வீழ்ச்சி அடை­வதை தடுக்­கவும், ஏற்­று­ம­தியை ஊக்­கு­விக்­கவும், மத்­திய அரசு சர்க்­கரை ஏற்­று­ம­திக்கு மானியம் வழங்­கு­கி­றது.
முந்­தைய அரசு, 2013–15 வரை­யி­லான இரு சந்தைப் பரு­வங்­களில் (அக்.,–செப்.,) 40 லட்சம் டன் சர்க்­கரை ஏற்­று­ம­திக்கு, டன்­னுக்கு, 3,300 ரூபாய் வீதம், மானியம் வழங்க முடிவு செய்­தது.சர்­வ­தேச நில­வ­ரங்­க­ளுக்கு ஏற்ப, இரு மாதங்­க­ளுக்கு ஒரு முறை, மானியம் நிர்­ணயம் செய்­யப்­ப­டு­கி­றது. இதன்­படி, பிப்.,– மார்ச்–ல், 3,300 ரூபா­யாக இருந்த மானியம், ஏப்ரல், மே மாதங்­களில், 2,277 ரூபா­யாக குறைக்­கப்­பட்­டது.
இந்­நி­லையில், மத்­தியில் அமைந்­துள்ள புதிய அர­சிடம், கரும்பு விவ­சா­யி­களின் நிலு­வையை வழங்­கவும், சர்க்­கரை விலை மேலும் வீழ்ச்­சி­ய­டை­வதை தடுக்­கவும், மானி­யத்தை உயர்த்த வேண்டும் என, இந்­திய சர்க்­கரை ஆலைகள் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்தி வந்­தன.இதை ஏற்று, ஜூன் – ஜூலை மாதங்­க­ளுக்­கான சர்க்ரை மானியம், மீண்டும் டன்­னுக்கு, 3,300 ரூபா­யாக உயர்த்­தப்­ப­டு­வ­தாக, மத்­திய உணவு அமைச்­சகம் அறி­வித்­துள்­ளது.
இதை வர­வேற்­றுள்ள, இந்­திய சர்க்­கரை உற்­பத்­தி­யா­ளர்கள் கூட்­ட­மைப்பு (இஸ்மா), 'கடந்த இரண்டு மாதங்­க­ளாக, குறைந்த சர்க்­கரை ஏற்­று­மதி, இனி சூடு பிடிக்கும்' என, தெரி­வித்­துள்­ளது.கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு, சர்க்­கரை ஆலைகள் இது­வரை, 11ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைத்­துள்­ளன. இதில், உத்­த­ர­பி­ர­தே­சத்தில் மட்டும், 7,200 கோடி ரூபாய் வழங்க வேண்டி உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)