பதிவு செய்த நாள்
13 ஜூன்2014
01:22
மும்பை:சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியத்தை, மீண்டும் டன்னுக்கு, 3,300 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, சர்க்கரை விலை மேலும் வீழ்ச்சி அடைவதை தடுக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு மானியம் வழங்குகிறது.
முந்தைய அரசு, 2013–15 வரையிலான இரு சந்தைப் பருவங்களில் (அக்.,–செப்.,) 40 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு, டன்னுக்கு, 3,300 ரூபாய் வீதம், மானியம் வழங்க முடிவு செய்தது.சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப, இரு மாதங்களுக்கு ஒரு முறை, மானியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, பிப்.,– மார்ச்–ல், 3,300 ரூபாயாக இருந்த மானியம், ஏப்ரல், மே மாதங்களில், 2,277 ரூபாயாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், மத்தியில் அமைந்துள்ள புதிய அரசிடம், கரும்பு விவசாயிகளின் நிலுவையை வழங்கவும், சர்க்கரை விலை மேலும் வீழ்ச்சியடைவதை தடுக்கவும், மானியத்தை உயர்த்த வேண்டும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தன.இதை ஏற்று, ஜூன் – ஜூலை மாதங்களுக்கான சர்க்ரை மானியம், மீண்டும் டன்னுக்கு, 3,300 ரூபாயாக உயர்த்தப்படுவதாக, மத்திய உணவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதை வரவேற்றுள்ள, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (இஸ்மா), 'கடந்த இரண்டு மாதங்களாக, குறைந்த சர்க்கரை ஏற்றுமதி, இனி சூடு பிடிக்கும்' என, தெரிவித்துள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள் இதுவரை, 11ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. இதில், உத்தரபிரதேசத்தில் மட்டும், 7,200 கோடி ரூபாய் வழங்க வேண்டி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|