பதிவு செய்த நாள்
13 ஜூன்2014
01:34
புதுடில்லி:இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பாக, ரங்கராஜன் குழு அளித்த பரிந்துரையை கிடப்பில் போட்டு விட்டு, புதிய குழு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய குழு:பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு முன்னாள் தலைவர் ரங்கராஜன் தலைமையிலான குழு, முந்தைய மத்திய அரசுக்கு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என, பரிந்துரைத்திருந்தது.இதன்படி, சென்ற ஏப்ரல் முதல், ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் எரிவாயுவின் விலை, 4.2 டாலரில் இருந்து, 8.3 டாலராக, உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பார்லிமென்ட் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, இந்த விலை உயர்வு, ஜூலை 1ம் தேதி அமலுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் திட்டமிட்டபடி, புதிய விலை அமலாவது சந்தேகமே என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:ரங்கராஜன் குழு, விலை நிர்ணயத்திற்காக எடுத்துக் கொண்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் சிக்கலான நடைமுறை கள் குறித்து, முந்தைய அமைச்சரவையிலேயே மாறுபட்ட கருத்துகள் எழுந்தன.அதனால், அவற்றை எளிமைப்படுத்தவோ அல்லது சுலபமான கணக்கீட்டு முறையில் புதிய திட்டத்தை உருவாக்கவோ மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக, புதிய வல்லுனர் குழு ஒன்றை நியமிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சாதகம்:மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக, இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் செய்துள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதில், சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பையும் மத்திய அரசு எதிர்பார்த்து உள்ளது. அதனால், திட்டமிட்டபடி, வரும் ஜூலை 1ம் தேதி முதல், எரிவாயு விற்கான புதிய விலை அமலுக்கு வருவது சாத்தியமில்லை.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|