பதிவு செய்த நாள்
13 ஜூன்2014
01:38
டோக்கியோ:ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம், அதன் கார்களில் உள்ள, காற்றுப் பைகளின் செயல்பாட்டில், தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய கோளாறு உள்ளதை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, உலகளவில், விற்பனை செய்யப்பட்ட, 22.70 லட்சம் கார்களை திரும்ப பெற்று, கோளாறை சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது.
இவற்றில், 16.20 லட்சம் கார்கள், வெளிநாடுகளிலும், 6.50 லட்சம் கார்கள் ஜப்பானிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.அவற்றில் கொரோலோ, யாரிஸ், நோவா உள்ளிட்ட 20 மாடல்கள் அடங்கும்.ஜப்பானில், கார் உரிமையாளர் ஒருவர், காற்றுப் பை செயல்பாட்டில் ஏற்பட்ட கோளாறால், ஓட்டுனர் இருக்கை தீ பிடித்து எரிந்தாக புகார் தெரிவித்து இருந்தார். அவருக்கு பலத்த காயம் அல்லது விபத்து ஏதும் ஏற்படவில்லை என்றபோதிலும், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக, டொயோட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக, டொயோட்டா நிறுவனம், லட்சக்கணக்கான கார்களை திரும்ப பெற்று, பழுது நீக்கி தந்து வருகிறது. இந்த வகையில், கடந்த ஏப்ரலில், 63.90 லட்சம் கார்களும், சென்ற மே மாதம், 5.20 லட்சம் கார்களும் திரும்ப பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|