பதிவு செய்த நாள்
13 ஜூன்2014
01:40
புதுடில்லி:‘‘உரம் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை’’ என, மத்திய உரங்கள் துறை அமைச்சர் ஆனந்த குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:தற்போது, ஒரு டன் உரம், 5,360 ரூபாய்க்கு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த விலை அப்படியே நீடிக்கும். இதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தற்போது, உரத்திற்கான தேவை, 3 கோடி டன்னாக உள்ளது. உள்நாட்டில், 2.20 கோடி டன் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய 80 லட்சம் டன் உரம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.உர நிறுவனங்களின், உற்பத்தி செலவிற்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசத்தை, மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|