பதிவு செய்த நாள்
13 ஜூன்2014
16:53
மும்பை : வாரத்தின் கடைசிநாளில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள், கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் சென்செக்ஸ் 348 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. ஈராக்கில் நிலவும் பதட்டமான சூழலால் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் அதுசார்ந்த பங்குகள் விலை சரிவை சந்தித்ததால் இந்திய பங்குசந்தைகள் இன்றும் கடும் சரிவை சந்தித்துள்ளன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 348.04 புள்ளிகள் சரிந்து 25,228.17 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 107.80 புள்ளிகள் சரிந்து 7,542.10 புள்ளிகளிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 26 நிறுவன பங்குகள் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, உலோகம், வங்கி உள்ளிட்ட நிறுவனம் சார்ந்த பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|