பதிவு செய்த நாள்
14 ஜூன்2014
00:31
புதுடில்லி:சென்ற மே மாதம், நாட்டின் சில்லரை பணவீக்கம், 0.31 சதவீதம் குறைந்து, 8.28 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, முந்தைய ஏப்ரலில், 8.59 சதவீதமாக இருந்தது. காய்கறிகள், பழங்கள், பால்பொருட்கள் மற்றும் தானியங்கள் விலை குறைந்ததால், அவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும், சில்லரை பணவீக்கம், முந்தைய மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.நடப்பாண்டு பிப்ரவரியில், சில்லரை பணவீக்கம், 8.03 சதவீதமாக இருந்தது. இது, மார்ச்சில், 8.31 சதவீதமாக இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் சில்லரை பணவீக்கம், சராசரியாக, 10 சதவீதம் என்ற அளவில இருந்ததால், ரிசர்வ் வங்கியின், வட்டி விகிதத்தில் அதிக அளவில் மாற்றம் இல்லாமல் இருந்தது. தற்போது சில்லரை பணவீக்கம் குறைந்து வருவதற்கான அறிகுறி தோன்றியுள்ளதால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைப்பது குறித்து பரிசீலிக்கும் என, தெரிகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|