பதிவு செய்த நாள்
14 ஜூன்2014
00:38
சென்ற மே மாதம், நாட்டின் தங்கம் இறக்குமதி, 35 டன்னாக குறைந்திருக்கும் என, அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டு, மே மாதம், 161 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தன. இதன் விளைவாக, தங்கம் இறக்குமதி, மாதம் சராசரியாக, 40 டன் என்ற அளவிற்கு சரிவடைந்தது. சென்ற மே மாதம் இது மேலும் குறைந்து, 35 டன்னாக வீழ்ச்சி கண்டிருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, எதிர்பார்த்ததை விட அதிகமாக குறைந்துள்ளதால், மத்திய அரசு, தங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற 2013–14ம் நிதியாண்டில், 2,800 கோடி டாலர் (1.68 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டது.
இது, தங்கத்திற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் பட்சத்தில், நடப்பு நிதியாண்டில், 4,000 கோடி டாலராக (2.40 லட்சம் கோடி ரூபாய்), உயரும் என, தரகு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|