பதிவு செய்த நாள்
14 ஜூன்2014
00:41
புதுடில்லி:காபி விலை கிடு கிடுவென சரிவடைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த மார்ச்சில், 4,000 ரூபாய்க்கு விற்பனையான, ஒரு மூட்டை (50 கிலோ) ரோபஸ்டா காபி, தற்போது, 3,300 ரூபாயாக சரிவடைந்துள்ளது.பிரேசில்:பிரேசிலில், காபி உற்பத்தி நன்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.
இந்நாட்டில், கடந்த, 2013–14ம் சந்தை பருவத்தில் (ஏப்.,–மார்ச்), காபி சாகுபடி, ஒரு ஹெக்டேருக்கு, 24.1 கோடி மூட்டைகள் என்ற அளவில் இருந்தன.இது, நடப்பு பருவத்தில், 27.5 கோடி மூட்டைகளாக உயரும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.அது போன்று, வியட்னாமிலும், ரோபஸ்டா காபி உற்பத்தி மிக சிறப்பாக இருக்கும் என, தெரிகிறது.கடந்த பருவத்தை விட, நடப்பு பருவத்தில்,வியட்னாம் காபி உற்பத்தி, 17 லட்சம் மூட்டைகள் அதிகரித்து, 2.93 கோடி மூட்டைகளாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால், விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில், காபி இருப்பு வைத்திருந்த விவசாயிகள், அவற்றை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.இதனால் சர்வதேச காபி விலை வீழ்ச்சி கண்டுள்ளது.இழப்பு:கடந்த மார்ச்சில், 2,200 டாலராக இருந்த ஒரு டன்ரோ பஸ்டா காபி விலை, தற்போது, 1,885 டாலராக குறைந்துள்ளது.இதன் தாக்கம் உள்நாட்டிலும் எதிரொலித்துள்ளது.தற்போதைய விலையில், கையிருப்பில் உள்ள காபியை விற்பனை செய்தால், இழப்புதான் ஏற்படும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|