பதிவு செய்த நாள்
14 ஜூன்2014
01:10
மும்பை:அமெரிக்காவின் எச்சரிக்கையால், ஈராக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, நேற்று இந்திய பங்குச் சந்தை, கடும் சரிவைக் கண்டது.
கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு,மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ ஒரே நாளில், 348.04 புள்ளிகள் சரிவடைந்து, 25,228.17 புள்ளிகளில் நிலை கொண்டது. இதற்கு முன், ஜனவரி 27ம் தேதி, மிக அதிக அளவாக,426.11 புள்ளிகளை, ‘சென்செக்ஸ்’ இழந்தது.சில்லரை பணவீக்கம் குறைந்தது, தொழில் துறை உற்பத்தி அதிகரித்தது போன்ற சாதகமான செய்திகளால், நேற்று பங்கு வர்த்தகத்தின் துவக்கத்தில், ‘சென்செக்ஸ்’25,688.31 புள்ளிகள் வரை, புதிய உச்சத்தை எட்டியது.
ஆனால், ஈராக் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை வழக்கத்தை விட, அதிகரித்ததை தொடர்ந்து, லாப நோக்கம் கருதி, அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டன.இதனால், ‘சென்செக்ஸ்’ மளமளவென சரிவடைந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 107.80 புள்ளிகள் அதிகரித்து, 7,525.35 புள்ளிகளில் நிலை கொண்டது.ஈராக் விவகாரம் முடிவிற்கு வரும் வரை, பங்குச் சந்தை ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|