தங்கம் இறக்­கு­மதி மேலும் குறைந்­ததுதங்கம் இறக்­கு­மதி மேலும் குறைந்­தது ... இந்திய எண்ணெய் இறக்குமதி சீராக உள்ளது : நிதித்துறை செயலர் இந்திய எண்ணெய் இறக்குமதி சீராக உள்ளது : நிதித்துறை செயலர் ...
உரத்­து­றையில் ரூ.20 ஆயிரம் கோடி முத­லீடு:விரைவில் புதிய கொள்கை அறி­விப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2014
01:13

புது­டில்லி:உள்­நாட்டில் உரம் உற்­பத்­தியை அதி­க­ரிக்கும் நோக்கில், மத்­திய அரசு, விரைவில் புதிய முத­லீட்டு கொள்­கையை அறி­விக்க உள்­ளது. இதன் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் முத­லீட்டில், மூன்று அல்­லது நான்கு உர உற்­பத்தி திட்­டங்கள் செயல்­பாட்­டிற்கு வரும் என, தெரி­கி­றது.
மாற்றம்:இந்­தி­யாவில் உரங்­க­ளுக்­கான தேவை, ஆண்­டுக்கு, 3 கோடி டன்­னாக உள்­ளது. இதில், உள்­நாட்டு உற்­பத்தி, 2.20 கோடி டன் என்ற அள­விற்கே உள்­ளது. இறக்­கு­மதி மூலம், எஞ்­சிய தேவை, பூர்த்தி செய்து கொள்­ளப்­ப­டு­கி­றது.உள்­நாட்டில் உர உற்­பத்­தியை அதி­க­ரிக்கும் நோக்கில், முந்­தைய ஐ.மு., அரசு, உரக் கொள்­கையில் சில மாற்­றங்கள் செய்­தது.அவற்றில், உர உற்­பத்­தியை துவக்கும் நிறு­வ­னங்கள், 300 கோடி ரூபாய்க்கு வங்கி உத்­த­ர­வாதம் வழங்கி,குறிப்­பிட்ட நிலைக்கு உற்­பத்தி உயரும் வரை, உத்­த­ர­வாத தொகையை, படிப்­ப­டி­யாக குறைத்துக் கொள்ளும் முக்­கிய அம்சம் இடம் பெற்­றுள்­ளது.
இது தொடர்­பான அர­சாணை, பார்­லிமென்ட் தேர்தல்நடத்தை விதி­மு­றைகள் அம­லுக்கு வந்­ததால், வெளி­யி­டப்­ப­ட­வில்லை.தற்­போது, மத்­தியில் அமைந்­துள்ள பா.ஜ., அரசு, உரத்துறையில் அதிக அளவில் முத­லீ­டு­களை ஈர்க்கும் நோக்கில், மேலும் சில அம்­சங்­களை சேர்த்து, உரக் கொள்கை குறித்த அர­சா­ணையை விரைவில் வெளி­யிட உள்ளது.இதை­ய­டுத்து, உட­ன­டி­யாக, 15 ஆயி­ரத்தில் இருந்து, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை­யி­லான முன்று அல்­லது நான்கு உர தயா­ரிப்பு திட்டப் பணிகள் துவங்கும் என, தெரி­கி­றது.அதில், ஒடி­சாவில் உள்ள, நலி­வ­டைந்த பெர்­டி­லைசர் கார்ப்­ப­ரேஷன் ஆப் இந்­தியா என்ற பொதுத் துறை நிறு­வ­னத்தின் புன­ர­மைப்பு திட்டம் மற்றும் மகா­ராஷ்­டி­ராவின் தால் பகு­தியில் புதிய உர தொழிற்­சாலை அமைக்கும் திட்டம் ஆகி­ய­வையும் அடங்கும்.
மானியம்:மூன்­றா­வ­தாக, தனியார் நிறு­வனம் ஒன்று, உர உற்­பத்­தியில் ஈடு­பட உள்­ளது. இந்த மூன்று நிறு­வ­னங்­களும், தலா, 5,000 கோடி ரூபாய் முத­லீட்டில், 13 லட்சம் டன் உர உற்­பத்தி திறனை கொண்­டி­ருக்கும். இத்­துடன், மேலும் ஒரு தனியார் நிறு­வ­னமும், உர உற்­பத்­தியில் கள­மி­றங்க உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.மேற்­கண்ட திட்­டங்கள் செயல்­பாட்­டிற்கு வந்தால், கிட்­டத்­தட்ட 40 லட்சம் டன் உரம் கிடைக்கும். இதனால், நாட்டின் உரம் இறக்­கு­மதி குறையும்.மத்­திய அரசு, விவ­சா­யி­க­ளுக்கு மானிய விலையில், ஒரு டன் உரம், 5,360 ரூபாய் வீதம் வழங்கி வரு­கி­றது.உள்­நாட்டு உர நிறு­வ­னங்­களின் உற்­பத்தி செல­விற்கும், விற்­பனை விலைக்கும் உள்ள வித்­தி­யாச தொகை, மானி­ய­மாக வழங்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)