பதிவு செய்த நாள்
14 ஜூன்2014
16:51
புதுடில்லி: நடப்பு 2014-15ம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்.,-மே), ரயில்வே வருவாய், 8.14 சதவீதம் உயர்ந்து, 24,272 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 22,445 கோடி ரூபாயாக இருந்தது.ஒட்டு மொத்த வருவாயில், சரக்கு போக்குவரத்து மூலம் ஈட்டிய தொகை, 15,661 கோடியிலிருந்து, 16,563 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 5.76 சதவீத வளர்ச்சியாகும்.
இது தவிர, பயணிகள் வாயிலான வருவாய், 15.34 சதவீதம் உயர்ந்து, 5,803 கோடியில் இருந்து, 6,693 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், இதர இனங்கள் வாயிலான வருவாயும், 2.76 சதவீதம் அதிகரித்து, 657 கோடியிலிருந்து, 675 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், மதிப்பீட்டு காலத்தில், முன்பதிவு மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை, 1.30 சதவீதம் குறைந்து, 139.60 கோடியிலிருந்து, 137.78 கோடியாக சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|