ரயில் கட்டணங்கள் உயர்கின்றன..?!ரயில் கட்டணங்கள் உயர்கின்றன..?! ... ரூ.1.80 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்! ரூ.1.80 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்! ...
ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 340
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2014
14:18

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த ஒரு வாரத்தில், சிமென்ட் விலை மூட்டைக்கு (50 கிலோ), 60 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, கட்டுமான துறையினர் அச்சம் தெரிவித்தனர்.
கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையான சிமென்ட் விலையை நிர்ணயிப்பதில், அதன் உற்பத்தியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த, 2007ல், ஒரு மூட்டை, 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிமென்ட் விலை, உற்பத்தியாளர்களின் நடவடிக்கையால், 300 ரூபாயை தாண்டிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பும், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பும், சிமென்ட் விலையை வேண்டுமென்றே உயர்த்துவதை, உற்பத்தியாளர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் தமிழகத்தில் இருக்கும், ஐந்து பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கள் பேசி வைத்துக்கொண்டு, முறையற்ற வகையில், விலையை உயர்த்தி வருவதாக கட்டுமான துறையினரின் புகாராக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில், ஒரு மூட்டைக்கு, 60 ரூபாய் வரை சிமென்ட் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் மூத்த நிர்வாகி, எல்.மூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில் கடந்த வார நிலவரப்படி, ஒரு மூட்டை சிமென்ட் மொத்த விற்பனையில், 270 ரூபாய்க்கு கிடைத்தது. சில்லரை விற்பனையில் இதன் விலை, 300 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது, மொத்த விற்பனையில் ஒரு மூட்டை சிமென்ட், 340 ரூபாயாகவும், சில்லரை விற்பனையில், 360 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. திடீரென, சிமென்ட் விலை மூட்டைக்கு, 60 ரூபாய் வரை உயர்ந்ததால், ஏற்கனவே துவங்கப்பட்ட கட்டுமான பணிகளை நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கான மேற்கொள்ளப்படும், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சிப் பகுதியில் மட்டும், 800 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. லாரிகளில் அதிக சுமை ஏற்றுவதை தடுக்க, சுப்ரீம் கோர்ட் அண்மையில் பிறப்பித்த உத்தரவு காரணமாக, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கெடுபிடி செய்வதாக கூறி, இந்த விலை உயர்வை உற்பத்தியாளர்கள் நியாயப்படுத்துகின்றனர். பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் போது, உடனடியாக தலையிட்டு, புதிய தீர்வு காணும் தமிழக அரசு இப்பிரச்னையிலும் தலையிட்டு உரிய தீர்வுக்காண உதவ வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)