பதிவு செய்த நாள்
18 ஜூன்2014
17:11
மும்பை : ஈராக்கில் நிலவும் பதற்றமான சூழலால் எண்ணெய்க்கான இறக்குமதி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதாலும், பணவீக்கம் உயர்வு மற்று உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் மந்தமான சூழலாலும் இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜூன் 18ம் தேதி) வீழ்ச்சி அடைந்தன. முன்னதாக பணவீக்கம் உயர்வு காரணமாக கடந்த இருதினங்களாக சரிவில் இருந்த பங்குசந்தைகள் நேற்று மீண்ட நிலையில், இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 274.94 புள்ளிகள் சரிந்து 25,246.25-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 73.50 புள்ளிகள் சரிந்து 7,558.20-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் முக்கிய நிறுவன பங்குகளில் அநேக பங்குகள் விலை சரிவிலேயே காணப்பட்டன. குறிப்பாக எண்ணெய் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை 2.10 சதவீதம் சரிந்து இருந்தன. இவைகள் தவிர பெல், எஸ்பிஐ., எல்அண்ட்டி., கோல் இந்தியா, எச்டிஎப்சி., டிசிஎஸ்., போன்ற நிறுவன பங்குகளும் சரிந்து காணப்பட்டன. அதேசமயம் சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹிண்டால்கோ நிறுவன பங்குகள் விலை உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|