‘தங்கம் இறக்குமதி வரியை 2 சதவீதமாக்க வேண்டும்‘தங்கம் இறக்குமதி வரியை 2 சதவீதமாக்க வேண்டும் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.08 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.08 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வங்கி பங்குகளை குவிக்கும் பரஸ்பர நிதி நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2014
23:30

புதுடில்லி :பங்கு சந்தை எழுச்சியால், சென்ற மே வரையிலுமாக, பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கித் துறை பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, சாதனை அளவாக, 48,419 கோடி ரூபாயை எட்டிஉள்ளது.
‘செபி’இது, அந்நிறுவனங்கள் நிர்வகித்து வரும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் (2.24 லட்சம் கோடி), 21.59 சதவீதம் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது.பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி பங்குகளில் முதலீடு மேற்கொள்வது, தொடர்ந்து நான்கு மாதங்களாக அதிகரித்து வருகிறது.வங்கியை அடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள், மென் பொருள் நிறுவன பங்குகளில், 22,986 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.இவற்றையடுத்து, மருந்து (15,027 கோடி), நிதி (12,152 கோடி) ஆகிய துறைகளின் முதலீடு உள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதி திட்டங்கள் மூலம், முதலீடுகளை திரட்டி, பங்குகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றன.கடந்த 2012ம் ஆண்டு டிசம்பரில், வங்கி பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு, 41,104 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.சொத்துமதிப்புஇது, நடப்பாண்டு ஏப்ரல் வரையிலான காலத்தில், 41,104 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில், 20.13 சதவீதமாகும்.
நடப்பாண்டு மே மாதத்தில், ‘சென்செக்ஸ்’ 8 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், வங்கி துறை குறியீட்டு எண், ‘பேங்க்எக்ஸ்’ 15 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டில், வங்கி பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற ஜனவரி முதல், மே வரையிலான காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி துறை பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 30,339 கோடியிலிருந்து (மொத்த சொத்து மதிப்பில் 16.6 சதவீதம்), 48,419 கோடி ரூபாயாக (மொத்த சொத்து மதிப்பில் 21.59 சதவீதம்) வளர்ச்சி கண்டு உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)