பதிவு செய்த நாள்
18 ஜூன்2014
23:33
புதுடில்லி ;சென்ற 2013–14ம் நிதியாண்டில், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடுகள் வாயிலாக, இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 23 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.71 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில்,3.52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு நிதியாண்டில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்,அதிகபட்சமாக,1.45 லட்சம் கோடியை திரட்டியுள்ளன.இருப்பினும், இது, இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 21 சதவீதம் குறைவாகும். ஒட்டு மொத்த நிதி திரட்டலில், தனியார் நிறுவனங்கள் திரட்டிய தொகை, 21 சதவீதம் சரிவடைந்து, 89,603 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
இதே போன்று, பொதுத் துறை நிறுவனங்கள் திரட்டிய தொகையும், 39,551 கோடியிலிருந்து, 31,248 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.மாநில அரசின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் திரட்டிய தொகை, 5,394 கோடியிலிருந்து, 1,482 கோடியாகவும், பொது நிறுவனங்கள் திரட்டிய தொகை, 57 சதவீதம் சரிவடைந்து, 3,686 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளன.
கணக்கீட்டு நிதியாண்டில், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு மூலம், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் அதிகபட்சமாக, 24,698 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.அடுத்த இடங்களில், எச்.டீ.எப்.சி., (24,269 கோடி), ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (24,253 கோடி), எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் (20,850 கோடி),எக்சிம் பேங்க் (10,461 கோடி) ஆகியவை உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|