‘தங்கம் இறக்குமதி வரியை 2 சதவீதமாக்க வேண்டும்‘தங்கம் இறக்குமதி வரியை 2 சதவீதமாக்க வேண்டும் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.08 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.08 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீட்டில்ரூ.2.71 லட்சம் கோடி திரட்டிய நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2014
23:33

புதுடில்லி ;சென்ற 2013–14ம் நிதியாண்டில், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடுகள் வாயிலாக, இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 23 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.71 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில்,3.52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு நிதியாண்டில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்,அதிகபட்சமாக,1.45 லட்சம் கோடியை திரட்டியுள்ளன.இருப்பினும், இது, இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 21 சதவீதம் குறைவாகும். ஒட்டு மொத்த நிதி திரட்டலில், தனியார் நிறுவனங்கள் திரட்டிய தொகை, 21 சதவீதம் சரிவடைந்து, 89,603 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
இதே போன்று, பொதுத் துறை நிறுவனங்கள் திரட்டிய தொகையும், 39,551 கோடியிலிருந்து, 31,248 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.மாநில அரசின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் திரட்டிய தொகை, 5,394 கோடியிலிருந்து, 1,482 கோடியாகவும், பொது நிறுவனங்கள் திரட்டிய தொகை, 57 சதவீதம் சரிவடைந்து, 3,686 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளன.
கணக்கீட்டு நிதியாண்டில், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு மூலம், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் அதிகபட்சமாக, 24,698 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.அடுத்த இடங்களில், எச்.டீ.எப்.சி., (24,269 கோடி), ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (24,253 கோடி), எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் (20,850 கோடி),எக்சிம் பேங்க் (10,461 கோடி) ஆகியவை உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)