பதிவு செய்த நாள்
20 ஜூன்2014
00:46
மும்பை:சர்வதேச நிலவரங்களால், நாட்டின் பங்கு வியாபாரம் நேற்றும் மந்தமாகவே
இருந்தது.ஈராக் கலவரத்தால், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 114 டாலராக எகிறியது. இதனால், மத்திய அரசின் பெட்ரோலிய பொருட்களுக்கான மானிய சுமை அதிகரிக்கும்
என்பதால், பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 44.45 புள்ளிகள் சரிவடைந்து, 25,201.80 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறு வனங்களுள், ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, ரிலையன்ஸ் உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டி.சி.எஸ்., மகிந்திரா, சன்பார்மா உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்கு களின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 17.50 புள்ளிகள் குறைந்து, 7,540.70 புள்ளிகளில் நிலைபெற்றது.
ரிசர்வ் வங்கி உத்தரவு:ரிசர்வ் வங்கி, நேற்று அன்னிய செலாவணி சார்ந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில், குறிப்பாக இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வோர், ௨௫ ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போன்று, வெளி நாட்டிலிருந்து இந்தியா வருவோரும் இதே தொகையை கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|