பதிவு செய்த நாள்
20 ஜூன்2014
00:56
புதுடில்லி:புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கும் நிறுவனங்கள், குறைந்தபட்சம், 25 சதவீதம் அல்லது 400 கோடி ரூபாய், இதில் எது குறைவோ அதை பொதுமக்களுக்கு ஒதுக்க வேண்டும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.
ஊக்குவிப்பு:டெல்லியில் ‘செபி’யின் நிர்வாக குழு கூட்டம் நேற்று கூடியது. இதில், மூலதனச் சந்தையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.இதுகுறித்த அறிக்கை விவரம் வருமாறு:பங்கு வெளியீடு மேற்கொள்ளும் அனைத்து நிறுவனங்களும், அவ்வெளியீட்டிற்கு பிந்தைய, சந்தை மூலதனம் 4,000 கோடி ரூபாய்க்கு மேற்படும் பட்சத்தில், அவை கண்டிப்பாக, அவ்வெளியீட்டில், 10 சதவீதத்தை பொதுமக்களுக்கு ஒதுக்க வேண்டும்.
மேற்கண்ட தொகைக்கு (ரூ.4000 கோடி) குறைவான சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில், குறைந்தபட்சம் 25 சதவீதம் அல்லது 400 கோடி ரூபாய்க்கு பொதுமக்களுக்கு பங்குகளை ஒதுக்க வேண்டும்.குளறுபடி:இதனால், 4,000 கோடி ரூபாய்க்கு குறைவான, சந்தை மூலதனத்தை கொண்ட நிறுவனங்கள், 1,000 கோடி ரூபாய்க்கு பங்கு ஒதுக்கீடு செய்வதும்; 4,000 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்ட நிறுவனங்கள், வெறும், 400 கோடி ரூபாய்க்கு பொதுமக்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்யும் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அவகாசம்:புதிய பங்கு வெளியீட்டில், பொதுமக்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகளை ஒதுக்க முடியாத சூழல் உருவாகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், மூன்று ஆண்டுகளுக்குள், அதை நிறைவேற்ற அவகாசம் அளிக்கப்படும்.பொதுத் துறை நிறுவனங்கள், கண்டிப்பாக, 25 சதவீத பங்குகளை, பொதுமக்களுக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், மூன்று ஆண்டுகளுக்குள் அத்தகைய நிலையை எட்ட வேண்டும்.
சிறிய நிறுவனங்கள்ஓராண்டிற்குள் வழங்கப்பட்ட இலவச பங்குகளையும், புதிய பங்கு வெளியீட்டில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.‘செபி’யின் நடவடிக்கைகள் மூலம், சிறிய நிறுவனங்களும், புதிய பங்கு வெளியீடு மேற்கொள்ள வழி பிறந்துள்ளது என, பங்குத் தரகு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|