பதிவு செய்த நாள்
20 ஜூன்2014
00:57
மும்பை:நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 2.46 லட்சம் கோடி ரூபாய் (4,400 கோடி டாலர்) என்ற அளவை எட்டும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு (ஜி.ஜே.இ.பி.சி.,) தெரிவித்து உள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆபரண துறையின் நலன் கருதி, தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், அமெரிக்கா
உள்ளிட்ட பல நாடுகளில், இந்திய ஆபரணங்களுக்கான தேவை, சிறப்பான அளவில்
அதிகரித்து வருகிறது.இது போன்ற காரணங்களால், நடப்பு நிதியாண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 4,400 கோடி டாலரை எட்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 3,950 கோடி டாலராக இருந்தது.இதில், தங்க ஆபரணங் கள் ஏற்றுமதி பங்களிப்பு, 786 கோடி டாலர் என்றஅளவிற்கே இருந்தது.இதற்கு, மத்திய அரசின் இறக்குமதி கட்டுப்பாடுகளால்,
உள்நாட்டில் தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்ட தே, முக்கிய காரணமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|